search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணத்தை நிறுத்திய மணமகள்"

    தஞ்சையில் இன்று காலை தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை மணமகள் நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், வல்லத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இன்று காலை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இதையொட்டி இன்று காலை மண்டபத்தில் இருவீட்டார் குடும்பத்தினர், உறவினர்கள் என தடபுடலாக திரண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினார்.

    மேலும் தான் வேறொரு வாலிபரை தாதலித்து வருவதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடுக்கிட்டனர்.

    இதற்கிடையே மணமகள் குடும்பத்தினர், மணமகளை சமரசப்புடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலன் அளிக்காமல் போனது. மணமகள் தான் காதலித்த வாலிபரை தான் கரம்பிடிப்பேன் என்று உறுதியாகவும், பிடிவாதமாகவும் கூறியதால் உடனடியாக திருமணம் நிறுத்தப்பட்டது.

    இதனால் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த வந்த இருவீட்டார் உறவினர்களும் சோகத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவம் பற்றி தஞ்சை மேற்கு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் போலீசார் விரைந்து வந்து மணமகளிடம் விசாரணை நடத்தினர்.
    கொடுமுடி மடேஸ்வரர் கோவிலில் இன்று தாலி கட்டும் நேரத்தில் பெண் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்தை திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இன்று திருமண முகூர்த்த நாள் என்பதால் பரப்பரப்பாக காணப்பட்டது.

    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று இருவருக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு கொடுமுடி கோவிலில் ராகு-கேது பரிகாரம் செய்யப்பட்டது. பிறகு திருமணத்துக்காக மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்திருந்தார்.

    திருமணத்துக்கு பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர். மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முயன்றார். அப்போது மணப்பெண் மாப்பிள்ளையை தாலி கட்ட விடாமல் கையை பிடித்து தட்டி விட்டார். இதனால் மாப்பிள்ளை மற்றும் இரு வீட்டார் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ‘‘மாப்பிள்ளை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் வேண்டாம்’’ என்றார் மணப்பெண். இதையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×